வாகனங்களுக்கு வரப் போகுது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள்!

வாகனங்களுக்கு வரப் போகுது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள்!

மோட்டார் வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்தும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் மட்டுமே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் அளித்துள்ள நிறுவனங்கள் வெளியிடும் ஹாலோகிராம் கொண்ட நம்பர் பிளேட்டை மட்டுமே பொருத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டது.
number plate mar 20
இதனிடையே இது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகள் வட்டாரம், ‘‘தமிழகத்தில் ஓடும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. நம்பர் பிளேட்டை வடி வமைப்பது, தயாரிப்பது, பொருத்துவது என 3 பணிகளையும் சேர்த்து செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். டெண்டரில் பங்கேற்க வரும் மே 6-ம் தேதி கடைசி நாளாகும். இறுதியில் நிறுவனங்களை தேர்வு செய்து பணிகள் தொடங்கப்படும்’’ என்றனர்.

அது சரி இதென்ன உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள்?

‘வாகனம் பற்றி தற்போது நடைமுறையில் இருக்கும் சில விதிமுறைகள், லைசென்ஸ், ஆர்.சி.புத்தகம், சாதாரண நம்பர் பிளேட்டுகள் போன்றவற்றில் ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி பல தில்லுமுல்லுகளைச் செய்கின்றனர். விபத்து ஏற்பட்டாலோ, வாகனங்கள் காணாமல் போனாலோ அந்த வாகனங்கள் மூலம் உரிமையாளரின் எந்த விபரத்தையும் அறிந்து கொள்ள முடியாமலிருக்கிறது,

இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட். ஒருமுறை பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டை அகற்றவோ, கழற்றி வேறு வாகனத்தில் பொருத்தவோ முடியாது. அப்படி முறைகேடு செய்ய முயற்சித்தால், அந்த நம்பர் பிளேட் தானாக அழிந் துவிடும் வகையில், அதில் ‘ஸ்நாப் லாக்’ தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நம்பர் பிளேட்களில் உள்ள விவரங்களை சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்தே காண முடியும். அதற்கேற்றவாறு இதில் குரோமியம் ஹாலோ கிராம் ஸ்டிக்கர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். நம்பர் பிளேட்டில் உள்ள ‘ரெட்ரோ ரிஃப்ளக்டிவ்’ ஸ்டிக்கரில் ‘இந்தியா’ என்று 45 டிகிரியில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருக்கும். அத்துடன் இடது ஓரத்தில் நீல நிறத்தில் ஐ.என்.டி என்ற எழுத்துகள் அச்சிடப்பட்டு இருக்கும். இதன் விலை சுமார் 1,000 ரூபாய் முதல் 1,200 வரை இருக்கும்.

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை அமல்படுத்துவதற்காக மத்திய மோட்டார் வாகன விதிகளில் கடந்த 2001-ம் ஆண்டே திருத்தம் கொண்டு வரப்பட்டுவிட்டது. அதன்பின், படிப்படியாக சில மாநிலங்கள் மட்டும் இந்த முறையை அமல்படுத்தின. ஆனால், தமிழகம் அப்போது முதல் இதில் அசமந்தமாக செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து 2006ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் தீர்ப்பளித்த கோர்ட் விரைவில் அனைத்து மாநிலங்களும் இந்த நம்பர் பிளேட் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்திலும் அதற்கான வேலைகள் ஆமை வேகத்தில் தொடங்கின. அதற்கு முன்பு வரை ‘ஸ்டிக்கர் தொழில் நுட்பம்’ மூலம் நம்பர் பிளேட்டுகள் தயாரித்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ‘உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்’ தயாரிக்கும் தொழில் நுட்பத்துக்கு மாறின. ஆனால், இந்த நம்பர் பிளேட்டுகளை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்தான் தயாரிக்க முடியும் என்று விதிமுறை உள்ளது. எனவேதான், இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளன

error: Content is protected !!