கருணாநிதி என்னைப் பார்த்து சிரித்தார் – வைகோ மகிழ்ச்சி!

கருணாநிதி என்னைப் பார்த்து சிரித்தார் – வைகோ மகிழ்ச்சி!

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதி உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்தார். முன்னதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் துரைமுருகன் வைகோவை வரவேற்றனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வைகோ சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”53 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவனாக இருந்தபோது கருணாநிதியை சந்தித்தேன். 23 ஆண்டுகளாக கருணாநிதியின் நிழலாக இருந்தேன். அவர் மீது ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக் கொண்டேன். வை கோபால்சாமியாக என்னை வைகோ என்று முதன்முதலாக அழைத்தவர் கருணாநிதி.

என்னை அரசியலில் வளர்த்தவர் கருணாநிதிதான். நெருக்கடி நிலை காலத்தின்போது எனக்கு ஆதரவு தந்தார். கடந்த 2 மாதங்களாக ஒவ்வொருநாளும் கருணாநிதி கனவில் வருகிறார்.போய் வருகிறேன் என்றதும் கருணாநிதி என்னைப் பார்த்து சிரித்தார். நல்ல நினைவாற்றலுடன் உள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெறுவார். அவரின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும்.

முரசொலி பவள விழாவில் பங்கேற்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். நானும் சம்மதம் சொன்னேன். சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள முரசொலி பவள விழாவில் கலந்துகொண்டு பேச உள்ளேன்” என்றார்.

Related Posts

error: Content is protected !!