நேருக்கு நேர் பேச வர மாட்டேன்.. போ – ட்ரம்ப் அறிவிப்பு!

நேருக்கு நேர் பேச வர மாட்டேன்.. போ – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவிருந்த அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூன்றுமுறை நேருக்கு நேர் விவாதம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளது. அதன்படி, அதிபர் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் – ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் இருவரும் அண்மையில் நேருக்கு நேர் விவாதம் நடத்தினர்.

இதற்கிடையே, அதிபர் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவ மனையில் இருந்து திரும்பிய அவர், தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், அக்டோபர் 15-ம் தேதி நடைபெற இருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ள்ளதாக அமெரிக்க அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!