ஐ.பி.எல். பாக்கிப் போட்டிகளை சென்னையிலே நடத்த மாட்டோம்! – கிரிக்கெட் வாரியம்!

ஐ.பி.எல். பாக்கிப் போட்டிகளை சென்னையிலே நடத்த மாட்டோம்! – கிரிக்கெட் வாரியம்!

சிங்காரச் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்கமாட்டோம் என போராட்டம் நடைபெற்றது. இதனால் மைதானம் அமைந்து உள்ள சேப்பாக்கம் பகுதியில் நேற்று மோசமான நிலை ஏற்பட்டது. போராட்டம் நடத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதற்கிடையே சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிலும் நேற்று சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தைச் சுற்றிலும்  நடைபெற்ற போராட்டத்தின்  போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. ஒருபக்கம் போரட்டக்காரர்கள் தாக்கப்பட, மற்றொரு பக்கம் போலீசார் &, போட்டியைக் காண வந்த  ரசிகர்களெல்லாம் தாக்கப்பட்டனர். மைதானத்தில் காலணிகளை வீசியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா, சீமான், வைரமுத்து, கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் வெளியாகியது. சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி வினோத் ராய் பேசுகையில், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம். விசாகப்பட்டணம், திருவனந்தபுரம், புனே மற்றும் ராஜ்கோர்ட் நகரங்கள் இதற்காக தயாராக இருக்கிறது என குறிப்பிட்டார். இவ்வரிசையில் விசாகப்பட்டணம் முதலிடம் பெறுகிறது.

இந்நிலையில் சென்னை போலீஸ் பாதுகாப்பு அளிக்கமுடியாது என கூறியதும் ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா பேசுகையில், “தமிழக காவல்துறை முழு பாதுகாப்பு அளிப்போம் என உத்தரவாதம் அளித்ததும் நாங்கள் திட்டமிட்டப்படி சென்னையில் அனைத்து போட்டிகளையும் நடத்த முயற்சி செய்தோம். ஆனால் இன்று சென்னை காவல்துறை அவர்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என சென்னை அணியிடம் தெரிவித்துவிட்டது. அதனால் விளையாட்டுப்போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. எங்களுடைய தேர்வில் புனே மைதானமும் உள்ளது,” என கூறிஉள்ளார்.

error: Content is protected !!