உடைந்தது பெப்சி ; உதயமானது டெக்னிசியன் யூனியன்!

உடைந்தது பெப்சி ; உதயமானது டெக்னிசியன் யூனியன்!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து புதியதாக துவங்கியுள்ள டெக்னீசியன் யூனியனில் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் இருந்த டெக்னீசியன் யூனியனிலிருந்து விலகி பலரும் இணைந்துள்ளனர்.அவர்களுக்கு அதற்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவுட்டோர் யூனிட் அசோசியனின் தலைவர்  முத்துசாமி வழங்கினார்.

அதாவது இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த படப்பிடிப்பில் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து பெப்சி சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் உட்பட பல்வேறு திரைப்படங்களை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே தயாரிப்பாளர் சங்கம் அவுட்டோர் யூனியன் ஆதரவுடன் திரைப்பட தொழிலாளர்களுக்கான புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர் அடையாள அட்டையை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வழங்கினார். 

பெப்சிக்கு போட்டியாக புதிய அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெப்சி அமைப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை மட்டுமே வழங்கப்படுவதாகவும், புதிய அமைப்பு எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் அவுட்டோர் யூனியன் தலைவர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். 

 தலைவர் விஷால் பேசியது:- புதியதாக துவங்கப்பட்டுள்ள டெக்னீசியன் யூனியன் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களுக்கு என்ன குறைகள், என்ன பிரச்சனைகள் இருந்தாலும் எங்களிடம் நீங்கள் தயங்காமல் கூறலாம்.தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் எப்போதும் இருக்கிறது என்றார்.
ஆனால் இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியான அறிக்கையில், இது சங்கம் அல்ல என்றும் பெப்சியுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்’
error: Content is protected !!