இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!
![இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2018/05/rpf-may-30a.jpg)
நம் நாட்டின் மிகப் பெரிய நிர்வாகமான இந்திய ரயில்வேயின் காவல் படையான ரயில்வே போலீஸ் போர்ஸ் என்பது சுருக்கமாக ஆர்.பி.எப்., என அழைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஆர்.பி.எப்., பின் பணி மகத்தானது. பெருமைக்குரிய இந்த காவல்படையில் கான்ஸ்டபிள் – எக்சிக்யூடிவ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரிவில், 9,739 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ரயில்வே மண்டல வாரியாக நிரப்பப்பட உள்ளன.
காலியிட விபரம்: மண்டல அளவிலான ஆண்களுக்கான கான்ஸ்டபிள் (எக்சிக்யூடிவ்) பிரிவில் 4,403 இடங்களும், இதே பிரிவிலான பெண் களுக்கான பிரிவில் 4,216 இடங்களும், சப் இன்ஸ்பெக்டர் பிரிவில் ஆண்களுக்கு 819 இடங்களும், பெண்களுக்கு 301 இடங்களும் சேர்த்து மொத்தம் 9739 இடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உடல் தகுதி : குறைந்தபட்ச உடல் தகுதிகள், ஆண்கள் உயரம் 165 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீ., மற்றும் உயரத்திற்கு நிகரான எடை பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்.பி.எப்., பின் மேற்கண்ட இடங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500.
கடைசி நாள் : 2018 ஜூன் 30.
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு