இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!

இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!

நம் நாட்டின் மிகப் பெரிய நிர்வாகமான இந்திய ரயில்வேயின் காவல் படையான ரயில்வே போலீஸ் போர்ஸ் என்பது சுருக்கமாக ஆர்.பி.எப்., என அழைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஆர்.பி.எப்., பின் பணி மகத்தானது.  பெருமைக்குரிய இந்த காவல்படையில் கான்ஸ்டபிள் – எக்சிக்யூடிவ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரிவில், 9,739 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ரயில்வே மண்டல வாரியாக நிரப்பப்பட உள்ளன.

காலியிட விபரம்: மண்டல அளவிலான ஆண்களுக்கான கான்ஸ்டபிள் (எக்சிக்யூடிவ்) பிரிவில் 4,403 இடங்களும், இதே பிரிவிலான பெண் களுக்கான பிரிவில் 4,216 இடங்களும், சப் இன்ஸ்பெக்டர் பிரிவில் ஆண்களுக்கு 819 இடங்களும், பெண்களுக்கு 301 இடங்களும் சேர்த்து மொத்தம் 9739 இடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உடல் தகுதி : குறைந்தபட்ச உடல் தகுதிகள், ஆண்கள் உயரம் 165 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீ., மற்றும் உயரத்திற்கு நிகரான எடை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
ஆர்.பி.எப்., பின் மேற்கண்ட இடங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500.

கடைசி நாள் : 2018 ஜூன் 30.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!