ஜெயில் சாப்பாடு வேணுமா? ஜெயில் சாப்பாடு!

ஜெயில் சாப்பாடு வேணுமா? ஜெயில் சாப்பாடு!

ஜெயிலில் சிலருக்கு மட்டும் சிறப்பான சாப்பாடு கிடைக்கிறது’ என்று சமீப நாட்களாக சிலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். மேடை போட்டு பட்டிமன்றம் நடத்தாத குறைதான்.!

அந்த புலம்பலுக்கு சொந்தக்காரராக இருந்தால் நீங்கள் நேராக கேரளா வந்து விடுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்யவிலலை என்றாலும் கூட தரமான ‘ஜெயில் சாப்பாடு’ இங்கே கிடைக்கிறது. அதற்கு கைதியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

என்ன…! ‘ஓசி’யில் கிடைக்காது. கொஞ்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவு தான்…!

சிறைகள் அமைந்துள்ள ஊர்களில் உள்ள அதன் வளாகங்களில் எல்லாம் சிறைத்துறையால், ‘ஃப்ரீடம் ஃபுட் ஃபேக்டரி’ என்ற பெயரில் உணவுக் கூடங்களை அமைத்திருக்கிறார்கள். அங்கு சமையலில் ஆர்வம் உள்ள சிறைக் கைதிகளின் உதவியோடு பல்வேறு உணவு வகைகளை தயாரிக்கிறார்கள்.

அப்படி தயாரிக்கப்படும் உணவுகள் அவர்களால் தரமாக பேக் செய்யப்பட்டு, டாட்டா ஏஸ் போன்ற சிறு வாகனங்களில் அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு வந்து விற்பனையும் செய்கிறார்கள்.

காலை பதினோரு மணி முதல் மாலை ஆறு மணி வரையில் கிடைக்கிற இந்த உணவு வகைகளுக்கு விலையும் மலிவாகவே உள்ளது.வாங்கும் பலரும் இதை, ‘அய்யே… ஜெயில் சாப்பாடா…?’ என்று முகமெல்லாம் சுளிக்காமல் தான் வாங்கிக் செல்கிறார்கள்.

ஜெயில் சாப்பாட்டைப் பத்தி இனியும் புலம்புவீங்களா என்ன….!

உன்னி கிருஷ்ணன்

error: Content is protected !!