வி.என்.சாமிக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது – சென்னை பிரஸ் கிளப் ஹேப்பி!

வி.என்.சாமிக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது – சென்னை பிரஸ் கிளப் ஹேப்பி!

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது பெறும் நமது மன்ற மூத்த உறுப்பினர் மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நல் வாழ்த்துகள் என்றும் தகுதியான மூத்த பத்திரிகையாளரை கலைஞர் எழுதுகோல் விருதுக்கு தேர்வு செய்த தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி எனவும் சென்னை பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று “சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும். ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்” என அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், 2021-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகள் பணியாற்றிப் பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந் தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த விருது ரூ.5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் கொண்டுள்ளது. வி.என்.சாமி அவர்கள் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி முதிர்ந்த அனுபவம் பெற்றுள்ளவர், இவர் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர். 9-6-1931 அன்று பிறந்தவர் 92 ஆண்டுகள் நிறைந்தவர். இளமையில் தந்தை பெரியார் அவர்களின் உதவியாளராகத் திகழ்ந்தவர். தமிழ்நாடு, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியபின் 1968-இல் தினமணி நாளிதழில் சேர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி, தலைமைச் செய்தியாளராக உயர்ந்து 1989ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றுள்ளார். பல்வேறு நூல்களைப் படைத்துள்ள வி.என்.சாமி அவர்கள் எழுதிய “புகழ்பெற்ற கடற்போர்கள்” என்னும் நூல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்வா.செ.குழந்தைசாமி அவர்கள் தமிழ்நாட்டின் வால்ட்விட்மன் என்று வி.என்.சாமி அவர்களைப் பாராட்டியுள்ளார்” என தெரிவித்துள்ளது.’

இதை அடுத்து சென்னை பிரஸ் கிளப் வெளியிட்டுள்ள பெருமிதப் பகிர்வில், “ சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘ கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் 6-9-2021 அன்று அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பின் படி , 2021ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகள் பணியாற்றிப் பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந் தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த விருது ரூ.5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் கொண்டுள்ளது.

50 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி முதிர்ந்த அனுபவம் பெற்றுள்ள மூத்த பத்திரிகையாளர், வரலாற்று ஆவணங்களாக திகழும் பல நூல்களை பெரும் முயற்சி செய்து இயற்றிய நூலாசிரியர் ,நமது சென்னை பத்திரிகையாளர் மன்ற மூத்த உறுப்பினர் திரு.வி.என்.சாமி அவர்கள் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துக் கொள்கிறது .

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்கள் 92 வயது நிறைவு செய்துள்ளார் .இளமையில் தந்தை பெரியார் அவர்களின் உதவியாளராகத் திகழ்ந்த அவர். தமிழ்நாடு, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியபின் 1968-இல் தினமணி நாளிதழில் சேர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி, தலைமைச் செய்தியாளராக உயர்ந்து 1989ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற திரு.வி.என்.சாமி அரும்பாடுபட்டு 720 பக்கங்களில் எழுதியுள்ள விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் நூல் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் தமிழக அரசின் கலைஞர் எழுது கோல் விருது , மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமியின் ஓயாத உழைப்புக்கு கிடைத்திருக்கும் ஒப்பற்ற அங்கீகாரம். மிகத் தகுதியான மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி அவர்களை கலைஞர் எழுதுகோல் விருதுக்கு தேர்வு செய்த தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். “ என்று தெரிவித்துள்ளது
.

error: Content is protected !!