நான் பெங்களூர் மத்தியத் தொகுதியில் போட்டியிடப் போறேன்!- நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

நான்  பெங்களூர் மத்தியத் தொகுதியில் போட்டியிடப் போறேன்!- நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சுயேட்சை வேட்பாளராக பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவர் உறுதி செய்துள்ளார். சமூக ஆர்வலர் கவுரி லங்கேஷ் கர்நாடகத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, கடும் சர்ச்சைகளில் சிக்கிய பிரகாஷ்ராஜ், தாம் அரசியலில் இறங்குவதாகவும், சுயேட்சையாகப் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்த நிலையில் அவருக்கு ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ் ராஜ் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி களில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி தனது நண்பரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப் பட்ட பிறகு, இந்துத் துவா அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். அத்துடன் தொடர்ச்சியாக, பா.ஜ.க மற்றும் மோடிக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவருகிறார்

இந்நிலையில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக போட்டி யிடப் போவதாக கடந்த 1-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக பிரகாஷ் ராஜ் நேற்று அறிவித்தார்.

பிரகாஷ் ராஜின் இந்த முடிவை வரவேற்றுள்ள டிஆர்எஸ் கட்சி, அவருக்கு தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் பிருத்வி கூறும்போது, “பிரகாஷ் ராஜ் போன்ற சமூக ஆர்வமுள்ள நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. அவரது முடிவை வரவேற்கிறேன். வருகிற மக்க ளவைத் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு ஆம் ஆத்மி முழு ஒத்துழைப்பு அளிக்கும். பிரகாஷ் ராஜ் போட்டியிடும் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம். எங்களது முடி வுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவும் ஒப்புதல் அளித்துள்ளனர்” என்றார்.

ஆம் ஆத்மி, டிஆர்எஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!