விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறினால்..? – ஐகோர்ட் எச்சரிக்கை!

விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறினால்..? – ஐகோர்ட் எச்சரிக்கை!

விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் செல்ல முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக மெட்ராஸ் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணியின் மூத்த தலைவர் ராமகோபாலன் மற்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்து முன்னணியினரின் மிரட்டல்களிலிருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்ற தெரிவித்ததுடன், அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசு ஏற்கனவே விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

error: Content is protected !!