லிங்குசாமி ஏமாத்திப்பூட்டார்! – சண்டைக் கோழி விஷால் கம்ப்ளையண்ட்

லிங்குசாமி ஏமாத்திப்பூட்டார்! – சண்டைக் கோழி  விஷால் கம்ப்ளையண்ட்

நடிகர் சங்க செயலாளரான விஷால் மற்றும் லிங்குசாமி கூட்டணியில் சண்டைகோழி 2-ம் பாகம் உருவாக இருந்தது.போன செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருந்த நிலையில் எதுவுமே திட்டமிட்டபடி நடக்க வில்லை. இந்நிலையில் சண்டகோழி பார்ட் டூ ட்ராப் என்று விஷால் நேற்று ட்வீட் செய்துள்ளார். மேலும் தன் ட்விட்டரில் “படைப்பாளிகள் சிலர், படத்தின்மீது ஈடுபாடு காண்பிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. நடிகர் நடிப்பிலும் இயக்குநர்கள் இயக்கத்திலும் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்று எண்ணுகிறேன். சண்டகோழி 2 கைவிடப்பட்டது” என்று ட்வீட் செய்தார்.
vishal feb 26
லிங்குசாமியின் முந்தைய இரு படங்களான வேட்டை, அஞ்சான் ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் அவர் தன்னை மீண்டும் நிலைநிறுத்த விஷாலுடன் இணைந்து சண்டகோழி பாகம் 2 படத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. விஷாலும் தன் கடந்தப் படங்கள் பெயிலாரானக் காரணத்தால் இதற்குத் தயாராக இருந்தார். ஆனால் லிங்குசாமி திடீரென வேறு முடிவு எடுத்துள்ளார்.

அதாவது தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனைக் கொண்டு அவர் புதிய படத்தை ஆரம்பிக்க உள்ளார். அல்லு அர்ஜுன் சென்னையில் வளர்தவர், தமிழ் அறிந்தவர் என்பதால் துணிச்சலுடன் இந்த முடிவை எடுத்துள்ளார். சண்டகோழியின் 2-ம் பாகத்தை எடுப்பதைவிடவும் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு புதிய கதையில் சாதித்துக்காட்ட லிங்குசாமி முடிவெடுத்துள்ளார்.

லிங்குசாமியின் இந்த மனமாற்றம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் விஷால் கூறும் போது, “இந்தப் படம் ஆரம்பமாக நான் 14 மாதங்கள் காத்திருந்தேன். இது தொடங்காததால் தான் கதகளி, மருது ஆகிய படங்களில் நடித்தேன். 15 நாள்களுக்கு முன்பு வரை லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஆரம்பிப்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லாமலேயே அவர் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட்டார். இதற்கான முன் தயாரிப்பு வேலைகளை நிச்சயம் 2 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருப்பார். அப்போதே என்னிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் திரைக்கதையின் இறுதி வடிவம் குறித்து கேட்டபோதுதான் அல்லு அர்ஜுனின் படம் பற்றி தகவல் தெரிவித்தார். தொழில்முறையில் இது சரியல்ல.

இதற்குப் பிறகு இருவரும் இணைந்து படம் பண்ணுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.சண்டகோழி 2 தயாரிப்பாளராக முன்தயாரிப்பு வேலைகளுக்குச் செலவு செய்துள்ளேன். லிங்குசாமிக்கு முன்பணமும் அளித்துள் ளேன். இந்த நஷ்டத்தைச் சுமூகமான முறையில் தீர்க்க நினைத்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தப் புகார் குறித்து ஒரு பேட்டியில் லிங்குசாமி, “இதற்குப் பதிலளித்து பிரச்னையை ஊதிப் பெரிதாக்க விரும்பவில்லை. என்னுடைய அடுத்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அதனால்தான் சண்டகோழி 2 கைவிடப்பட்டுள்ளது”என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!