என் பக்கத்தை ஏன் முடக்குனீங்க?-பேஸ்புக்கை கோர்ட்டுக்கு இழுத்து இழப்பீடு பெற்ற அமெரிக்கர்!

என் பக்கத்தை ஏன் முடக்குனீங்க?-பேஸ்புக்கை கோர்ட்டுக்கு இழுத்து இழப்பீடு பெற்ற அமெரிக்கர்!

ம்மில் பலரும் பயன்படுத்தும் பேஸ்புக்கில் நமக்கான பக்கத்தில் பிரபாகரன், விடுதலைப் புலிகள், ஈழம் என்று எழுதினாலே முகநூல் கணக்கையும் முகநூல் பக்கத்தையும் முடக்கி விடுகிறார்கள். அதேபோல கோவிட், உக்ரைன், ரஷ்யா, புதின் என்ற வார்த்தைகளை எழுதினாலும் தடைதான். இது கருத்துச் சுந்திரத்துக்கு எதிரானது” என்று ஆதங்கப்பட்டு புலம்புவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. இப்போதெல்லாம் அரசியல் கட்சிகளும் இதர அமைப்புகளும் பொதுக்கூட்டம் நடத்தித் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவது அருகிவிட்டது. சமூக வலைதளங்களிலேயே அரசியல் தலைவர்களும் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். இந்த நிலையில் பேஸ்புக்கின் கருத்துச் சுதந்திரப் பறிப்புக்கு எதிராக இங்கு களமிறங்கவில்லை என்றாலும் தன்னுடைய பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்றிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட் (Jason Crawford). வழக்கறிஞரான இவர், பேஸ்புக் கணக்கு ஓபன் அதன் பயனராக இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு, அவருடைய  பக்கம் திடீரென முடக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த நிறுவனம் ஒரு நீளமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

அதில், ”தாங்கள் குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளைப் பார்த்துள்ளீர்கள். அது, முகநூல் விதிகளை மீறும் செயல் என்பதால் தங்களுடைய கணக்கு முடக்கப்பட்டு உள்ளது” எனக் கூறப்பட்டிருந்தது. இதற்கு அவர், “தான் முகநூல் விதிகளை மீறும் வகையில் அதுபோன்ற எந்தப் பதிவுகளையும் பார்க்கவில்லை” எனத் தெரிவித்ததுடன், முடக்கப்பட்ட தனது பேஸ்புக் கணக்கையும் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நிறுவனத்திடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், அவரது முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசன், எந்தவித காரணமும் இன்றி தனது கணக்கை முடக்கிய பேஸ்புக் நிறுவனமான மெட்டா மீது ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், ஜெசனின் கணக்கை முடக்கியதற்கான காரணத்தை பேஸ்புக் நிறுவனத்தால் தெரிவிக்க முடியவில்லை. இதையடுத்து அவருடைய பேஸ்புக் கணக்கை முடக்கியதற்காக 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 41 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து முடக்கப்பட்ட அவரது  கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதேவேளை, ஜெசனுக்கு 50 ஆயிரம் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த தொகையை மெட்டா நிறுவனம் இதுவரை வழங்கவில்லையாக்கும்

error: Content is protected !!