பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகள் அழிந்து போய் விடும்?

பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகள் அழிந்து போய் விடும்?

உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் பூமி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக மாறி கடல் நீரில்   கலக்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

trump nov 23

இதே நிலை நீடிக்குமானால், பூகோள ரீதியாக பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இதை சாமளிப்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதில் ஒரு பகுதியாக தற்போது ஐநாவில் நடைபெற்று வரும் பருவ நிலை மாற்ற மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை, சுமார் 1.5 டிகிரி செல்சியல்ஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று குறித்த நாடுகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன என கூறப்படுகிறது. இதனால் 2050 ஆம் ஆண்டிற்குள் புதுபிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

48 நாடுகள் கூட்டமைப்பில், ஆப்கானிஸ்தான் ,ஹைதி, பிலிப்பைன்ஸ்,வங்காளதேசம்ஹோண்டுராஸ்,  ரிவாண்டா, பர்படோஸ், கென்யா, செயிண்ட் லூசியா, பூடான்,செனகல்,புர்கினா பெசோ,மடகாஸ்கர்,தெற்கு சூடான்,,கம்போடியா,மாலவி, இலங்கை,கம்மோரோஸ்,மாலத்தீவுகள், சூடான், கோஸ்டோ ரிகா, , மார்ஷல் தீவுகள், தான்சானியா, காங்கீ மங்கோலியா குடியரசு டிமோர் லெஸ்டி, டொமினிக்கன் குடியரசு, மொராகோ, துனிசியா, எதோப்பியா, நேபாளம்,துவலு பிஜி, நைஜர், ஹன்வடு, கானா, பலவு, வியாட்னாம்கிரினடா,பப்புவாநியூகினியா, ஏமன், Guatemala உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று   வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

அவர் பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை வீடியோ செய்தி ஒன்றில் அறிவித்துள்ளார். அதில் அவர், பதவி ஏற்கும் முதல் நாளில் ‘டி.பி.பி.’ என்று அழைக்கப்படுகிற பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, விலக்கிக்கொள்ளப்போவதுதான் முதல் வேலை என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!