வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி!

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தும் வகையில் சேலத்தில் 1-ந் தேதி(வியாழக்கிழமை) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். அது தொடர்பாக நேற்று சேலத்தில் ஒருங்கிணைந்த பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

pmk aug 28

கூட்டம் முடிந்ததும் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் , “வருகிற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்துப்போட்டியிடுகிறது. அதே வேளையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் வேட்பாளர்களுக்கு மற்றவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உள்ளூர் பகுதியில் உள்ள நல்ல சேவை செய்யக்கூடிய, அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகிறவர்கள் போட்டி யிடுவார்கள். எனவே, உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!