உதயநிதி ஸ்டாலின் லைக்கா புரொடக்ஷனிலே நடிக்கிறார்!
பிரான்ஸ் நாட்டில் லைக்கா நிறுவனம் நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக கைது நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு லைக்கா நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “கடந்த இரு தினங்களாக லைகா மொபைல், லைகா தயாரிப்பு நிறுவனம் குறித்து தமிழ்நாட்டு ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி. லைகா மொபைல் நிறுவனம் 21 நாடுகளில் தொலைதொடர்பு சேவை அளித்து வருகிறது. அதுவும் குறிப்பாக அதிக செலவு வைக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவையைப் பெற முடியாதவர்களுக்காக நாங்கள் சேவை வழங்கி விருகிறோம்.
லைகா தயாரிப்பு நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.தற்போது நாங்கள் பிரபல தமிழ் நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அக்ஷய்குமார், தனுஷ், ஜி.பி.பிரகாச்ஜ், விஜய் ஆண்டனி ஆகியோருடன் பணியாற்றுகிறோம். இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடனும் தொடர்பில் இருக்கிறோம்” என்று லைக்கா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்குவார் என இருந்தது. ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் லைக்கா புரொடக்ஷனில், தூங்கா நகரம் பட இயக்குனர் கெளரவ் நாராயணன் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது