ரசிகர்களிடம் டுவிட்டர் மூலம் உரையாடவிருக்கும் “விஜய்”!
நடிகர் விஜய் கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை” மாலை 4 மணியளவில் தனது ரசிகர்களிடம் ட்விட்டர் மூலம் நேரடியாக உரையாட விருக்கிறார். அவர் தனது “Official Fan Page @Vijay_cjv” வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
நடிகர் விஜய் சமூக வலைதளத்தின் மூலம் தனது ரசிகர்களிடம் உரையாடப்போவது ஜில்லாவின் வெற்றியைத் தொடர்ந்து இது இரண்டாவது முறை. இச் செய்தியை கேள்விப்பட்டு அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இளையதளபதி விஜய் உரையாடப்போவது இந்த லிங்கில் தான்:https://twitter.com/Vijay_cjv