புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்பு!

புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்பு!

நம் நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா டில்லி ராஷ்டிரபதி பவனில் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்திய தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர், தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய ஆணையர்களும், தலைமை ஆணையரும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக பெயர்களை அறிவித்தது

இந்நிலையில், இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட சுதிர் பார்கவாவுக்கு டில்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகள் யஷ்வர்தன் குமார் சின்ஹா, வனஜா என் சர்னா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்ட செயலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்ற இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!