2021ம் ஆண்டிலும் 3வது முறையாக அதிமுக ஆட்சி !- எடப்பாடி நம்பிக்கை!

2021ம் ஆண்டிலும் 3வது முறையாக அதிமுக ஆட்சி !- எடப்பாடி  நம்பிக்கை!

அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்து அக்கட்சி அதிகாரப் பூர்வமாக நேற்று அறிவித்த நிலையில், அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியை அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும். என் மக்கள் எதற்காகவும், யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என ஜெயலலிதா கூறினார். அவரது கனவை நிறைவேற்றி காட்டும் கடமை நமக்கு காத்திருக்கிறது. 2021ம் ஆண்டிலும் 3வது முறையாக அதிமுக ஆட்சி தொடரும்.

தொண்டர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைப்பதை நிறைவேற்றி காட்டுவேன் என்பது சத்தியம்.உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமைச் சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதற்காக என் ஆயுளின் கடைசி விநாடி வரை இந்த இயக்கத்துக்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன் “. என்று தெரிவித்துள்ளார்

இதோ முதல்வர் எடப்படி கடித முழு விபரம்:

error: Content is protected !!