எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்? சீனா & நேபாளம் மீண்டும் அளந்து வருகின்றன!.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?  சீனா & நேபாளம் மீண்டும் அளந்து வருகின்றன!.

எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான மலையாக கருதப்படுகிறது. 1955ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவிடப்பட்டது. அப்போது சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் (29,029 அடி) என்ற முடிவுக்கு வரப்பட்டது. அதன்பின் 15 ஆண்டுகள் கழித்து சீனா மேற்கொண்ட அளவீட்டின்படி சிறு மாற்றம் செய்யப்பட்டு எவரெஸ்ட் உயரம் 88,44.43 மீட்டர் என்று கூறப்பட்டது. எனினும், 1955ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அளவீட்டின் முடிவுகளையே உலகம் இன்னும் ஏற்கிறது.

இந்நிலையில், தற்போது சீனா, நேபாளம் ஆகிய நாடுகள் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்து வருகின்றன. இதற்காக சீனாவும், நேபாளமும் கைகோர்த்து தனித்தனியாக எவரெஸ்ட் உயரத்தை அளந்து வருகின்றனர். இருநாடுகளும் தங்களது முடிவை ஒரே நேரத்தில் வெளியிட வேண்டுமென்பது அவர்களின் ஒப்பந்தம்.

அளவீட்டு பணி கொரோனாவால் தாமதமாகியது. எனினும், சீனா தனது குழுவை மே மாதம் அனுப்பிவிட்டது. மறுபுறம் நேபாளம் தனது தரப்பில் 2019ஆம் ஆண்டிலேயே எவரெஸ்ட் சிகரத்தை அளக்கும் பணியை தொடங்கிவிட்டது. இப்படி இரு நாடுகளும் ஒரே நேரத்தில் எவரெஸ்ட் மலையை அளப்பது புவியியல் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1955ஆம் ஆண்டு அளவீட்டின் முடிவுகளை சீனாவும், நேபாளமும் இன்னும் ஏற்க மறுக்கின்றன. இதற்காகவே தங்களது தரப்பில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிட சீனாவும், நேபாளமும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

எவரெஸ்ட் மலை மீது இருந்த பனிப் பாறையால்தான் 1955ஆம் ஆண்டில் 8,848 மீட்டர் என கணக்கிடப்பட்டிருக்கும் என்று நேபாளம் வாதிடுகிறது. இந்த வாதத்தை சீனாவும் ஏற்கிறது. எனவே இருநாடுகளும் கூட்டு சேர்ந்து எவரெஸ்ட் மலையை அளந்து வருகின்றன.

மேலும் 2015ஆம் ஆண்டில் நேபாளத்தை தாக்கிய நிலநடுக்கமும் மற்றொரு காரணம். இரு நாடுகளும் விரைவில் தங்களது அளவீட்டு முடிவுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!