நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போல் அதிரடி

நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போல் அதிரடி

பல வி.ஐ.பி.களை போல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடிக்கு் எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும் அவரது சகோதரர் நிஷால் மோடிக்கும் ஊழியர் சுபாஷ் பாரப் ஆகியோருக்கு எதிராக சிபிஐயின் வேண்டுகோளுக்கு இணங்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி பேங்கான அபஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.11,400 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க அவர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன. விசாரணை முகமைகள் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன. நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை முகமைகள் பறிமுதல் செய்து வருகின்றன. நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய விசாரணை முகமைகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து சம்மன்கள் அனுப்பி வருகின்றன. அதோடு, நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், போலி பாஸ்போர்ட்கள் மூலமாக நிரவ் மோடி பல நாடுகளுக்கு சென்று வந்ததாக செய்திகள் வெளியாகின. நிரவ்மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட தகவலை இண்டர்போலிடம் சிபிஐ தெரிவித்தது.

விசாரணை முகமைகளின் தொடர் நடவடிக்கைகளையடுத்து, நிரவ்மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது. நிரவ் மோடிக்கு எதிராக மட்டுமல்லாமல் அவரது சகோதரர் நிஷால் மோடி, ஊழியர் சுபாஷ் பாரப் ஆகியோருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

 

சிபிஐயின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த ஜூன் 29 ஆம் தேதியே இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்றுதான் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இண்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இண்டர்போல் உறுப்பு நாடுகளிடம், நிரவ் மோடியின் இருப்பிடத்தை கண்டறியுமாறும் அவர் கண்டறியப்பட்டால் கைது செய்து நாடு கடத்த வேண்டும் என கோரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!