சென்னையில் நொடிக்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – சர்வே முழு விவரம்

சென்னையில் நொடிக்கு ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை! – சர்வே முழு விவரம்

குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண்களில் நொடிக்கு ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையை சேர்ந்த தாகம் எனும் என்ஜிஓ அமைப்பு பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, செம்மஞ்சேரி, காசிமேடு, ராமாபுரம் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் குடிசைப்பகுதி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் இரண்டில் ஒரு பெண் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

edit feb 26

இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணதாசன், குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தங்களின் உறவினர்களால் பாலியல் தொல்லைகளை அனுபவித்து வருவதாகவும், ஆனால் அவற்றை வெளியே சொல்வதில்லை என்றும் கூறியிருக்கிறார். காவல்நிலையங்களிலேயே பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போல் குடிசைப்பகுதியில் வசிக்கும் 5 பெண்களின் ஒருவருக்கு 15 வயதாகும் போத திருமணம் நடந்துவிடுகிறது. 1000 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 400 பெண்கள் தங்களின் 20 வயதுக்கு முன்பே அதிக வயதுள்ள ஆண்களஐ திருமணம் செய்து வைத்துவிட்டனர் என்று கூறியுள்ளனர். அவர்களில் 40 சதவீத பெண்கள் திருமண வாழ்க்கை பிடிக்காததால் கணவனை விட்டு பிரிந்து வாழ்கின்றனர். இப்படி பிரிந்து வாழ்வதற்கு முக்கிய காரணம் கணவரின் சொந்தங்களே என்றும் காரணம் சொல்கின்றனர்.

கல்வியறிவில் 40 சதவீத பெண்கள் மட்டுமே தொடக்கக்கல்வியை கடந்துள்ளனர். அவர்களில் 2 சதவீத பெண்கள் மட்டுமே முதுகலை பட்டம பெற்றுள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை என்பதால் பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு தகுந்த வசதிகளை செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வே முழு ரிப்போர்ட்

error: Content is protected !!