AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

தமிழகத்தை வாட்டும் கத்திரி வெயில்: பாதங்கள் மூலம் உடலின் உஷ்ணத்தை தணிக்கும் எளிய தெரபி!

By admin | May 28, 2026

மிழகத்தில் வழக்கம் போல் நடப்பு ஆண்டில் சூரியனின் உக்கிரம் உச்சத்தைத் தொட்டுள்ளதால், அக்னி நட்சத்திர வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்கவும், சன் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மக்கள் புதுப்புது வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து, பேசுபொருளாக மாறியிருப்பதுதான் ‘ஃபுட் இம்மெர்ஷன்’ (Foot Immersion) எனப்படும் பாதங்களைக் குளிர்விக்கும் எளிய இயற்கை மருத்துவம். 15 நிமிடங்களில் உடலின் உள் வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் இந்தத் தற்காலிக முதலுதவிக்கு பின்னால் உள்ள மருத்துவ உண்மைகளை விரிவாகப் பார்ப்போமா?.

பாத சிகிச்சை எவ்வாறு உடலைக் குளிர்விக்கிறது?

அதிகப்படியான வெக்கையின் காரணமாக உடல் சூடாகி, சோர்வடையும் போது, ஒரு பாத்திரத்தில் சாதாரணக் குளிர்ந்த நீரை ஊற்றி, அதில் கணுக்கால் முழ்கும் வரை பாதங்களை நனைத்து அமர்வது வியக்கத்தக்க மாற்றத்தைத் தருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதன் அறிவியல் பின்னணி என்னவென்றால், மனித உடலின் மற்ற பகுதிகளை விட நம்முடைய உள்ளங்கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளில் ரத்த நாளங்கள் தோலுக்கு மிக அருகில், அடர்த்தியாகக் காணப்படுகின்றன. கால்களை நீரில் வைக்கும் போது, அந்தப் பகுதியில் பாயும் ரத்தத்தின் உஷ்ணம் உடனடியாகக் குறைகிறது. இந்தத் குளிர்ந்த ரத்தம் இதயம் வழியாக உடல் முழுவதும் மிக வேகமாகச் சுழற்சி செய்யப்படுவதால், உடலின் ஒட்டுமொத்த வெப்பமும் சில நிமிடங்களிலேயே தணிகிறது.

இயற்கையாகவே மனித உடலால் வெப்பத்தை வெளியேற்ற முடியாத இக்கட்டான சூழலில்தான் மயக்கம், வாந்தி, நீர்ச்சத்து இழப்பு போன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு இந்த முறை ஒரு சிறந்த தற்காப்பாக அமைகிறது.

அறிவியல் ஆய்வுகள் தரும் சான்று

சர்வதேச மருத்துவ ஆய்வு இதழான JAMA Network Open வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், 20 டிகிரி செல்சியஸ் அளவிலான சாதாரணக் குளிர்ந்த நீரில் பாதங்களை நனைத்து வைப்பது, கோடைக் காலத்தில் ஏற்படும் உடல் அசௌகரியங்களையும், அதீத வெப்ப அழுத்தத்தையும் (Heat Stress) கணிசமாகக் குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெயிலில் களப்பணியாற்றும் தொழிலாளர்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீடுகளில் ஏசி வசதி இல்லாத நடுத்தர மக்களுக்கு இந்த எளிய முறை ஒரு வரப்பிரசாதமாகும்.

கடைப்பிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகள்

இம்முறையைச் செயல்படுத்தும் போது பின்வரும் விதிமுறைகளைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்:

அதிக பாதிப்புக்குள்ளாகும் பிரிவினரும் எச்சரிக்கை அறிகுறிகளும்

வெப்ப அலையின் போது அதிகக் கவனமுடன் இருக்க வேண்டிய உயர் ஆபத்துக் குழுவினர்:

உடனடி எச்சரிக்கை அறிகுறிகள்: திடீரென வியர்வை நின்று போவது, படபடப்பு, வாந்தி உணர்வு, தலைச்சுற்றல், கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் குழப்பமான மனநிலை ஆகியவை ஆபத்தின் அறிகுறிகள். இவற்றை அலட்சியப்படுத்தினால் பக்கவாதம் அல்லது உயிரிழப்பு வரை கொண்டு செல்லக்கூடும் என்பதால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

கோடையை எதிர்கொள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள்

பாதங்களைக் குளிர்விப்பது என்பது அவசரக் கால தற்காலிக நிவாரணம் மட்டுமே. கோடைக் காலம் முழுவதும் உடலின் ஆரோக்கியத்தைப் பேணப் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் அரவிந்தா S N சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்:

உடல் அதீத வெப்பமடைவதை உணர்ந்தால் உடனடியாக நிழலான இடத்திற்குச் சென்று, காற்றோட்டமாக ஓய்வெடுத்து, குளிர்ந்த நீர் பருகுவதே முதற்கட்டப் பாதுகாப்பாகும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்