AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

புகையிலை பிரியர்களுக்கு பேரிடி: விண்ணைத் தொடப்போகும் சிகரெட் விலை!

By admin | Dec 28, 2025

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் புகையிலை பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கும் கலால் வரி சட்டத்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளார். இந்த அதிரடி மாற்றத்தினால், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரப் போகிறது. குறிப்பாக, இனிமேல் சிகரெட்டின் விலை அதன் தரம் மற்றும் நீளத்திற்கு (Length) ஏற்ப தனித்தனியாக நிர்ணயிக்கப்பட உள்ளது. புதிய சட்டத்தின்படி, 1,000 சிகரெட்டுகளுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூபாய் 200 முதல் 735 வரையிலான வரி, இனிமேல் ரூபாய் 2,700 முதல் ரூபாய் 11,000 வரை பலமடங்கு உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த அதிரடி வரி உயர்வு சாதாரண சிகரெட் முதல் பிரீமியம் ரகங்கள் வரை அனைத்தையும் பாதிக்கும் என்பதால், சிகரெட் சந்தையில் மிகப்பெரிய விலை மாற்றம் காத்திருக்கிறது.

விலை உயர்வு: முக்கிய அம்சங்கள்

ஏன் இந்த உயர்வு?

புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை ஏற்று அரசு அவ்வப்போது வரிகளை உயர்த்தி வருகிறது. இருப்பினும், இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ள ‘அதிரடி வரி உயர்வு’ புகையிலை நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.