AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

தொடுதல் மூலம் கணனி டேட்டாவை களவாடலாம்!

By admin | Sep 10, 2014

இஸ்ரேலின் – டெல் அவிவ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உலகத்தையே உலுக்கும் ஒரு அற்புத கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி காட்டியிருக்கின்றனர். உலகத்தின் அத்தனை இடத்திலும் இன்று கணணி என்னும் ஒரு அற்புத சாதணம் நம் தின வாழ்வில் பெரும் பங்கை ஆற்றி கொண்டிருக்கிறது. அது சிறு வியாபாரகமாகட்டும் – ஒரு நாட்டின் இமிகிரேஷன் ஆகட்டும் கணனி சொல்லும் விஷயத்தை நம்பித்தான் மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள். அதனால் கணனி மிகவும் பாதுகாப்பு வாய்ந்த இடத்தில் சர்வரை இன்ஸ்டால் செய்து அதன் மூலம் உலகின் எந்த ஒரு மூளையில் இருந்து அந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

அதெல்லாம் பாதுகாப்பு என்று இது வரை நாம் நினைத்து கொண்டிருந்த நேரத்தில் இந்த ஆராய்ச்சியாளர்கள் வெறும் தொடுதல் மூலமாகவே கணனியில் இருக்கும் அத்தனை டேட்டா என்னும் விஷயங்களை களவாட முடியுமாம். ஒரு கையில் ஒரு ரிஸ்ட் பேன்ட்டை கட்டி அதை இன்னொரு கணனி அல்லது டேட்டா பேங்கில் இணைத்து இன்னொரு கையின் மூலம் எந்த ஒரு கணனியை தொட்டாலும் போதும் அத்தனை ஃபைலும் இந்த ரிஸ்ட் பேன்ட் மூலம் வந்து சேர்ந்துவிடும்.

இது சில மின் அதிர்வுகள் மூலம் நிகழ்வதாய் கூறினாலும் முழு விஷயங்களை இன்னும் தெரிவிக்கவில்லை.

New Tech – People can steal your computer data by just TOUCHING