வேடுவன் (Web Series) விமர்சனம்: மறைக்கப்பட்ட உண்மைகளை வேட்டையாடும் என்கவுண்டர் த்ரில்லர்!
ZEE5 ஒரிஜினல்ஸ் வரிசையில் ‘அயலி’, ‘ஐந்தாம் வேதம்’ போன்ற தரமான படைப்புகளைத் தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ‘வேடுவன்’ வெப் சீரிஸ், ஒரு வெப் சீரிஸ் எப்படித் திரைப் படத்திற்கான தரத்தையும், இறுக்கத்தையும் கொண்டிருக்கும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இயக்குநர் பவனின் தீர்க்கமான எழுத்து, நடிகர் கண்ணா ரவியின் (சூரஜ்) இரு துருவ நடிப்பால், ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போடும் ஒரு த்ரில்லர் அனுபவத்தை இந்தத் தொடர் வழங்கியுள்ளது.
கதைச் சுருக்கம்: துரியோதனன் வேட்டையாடப்பட்டாரா?
வளர்ந்து வரும் நடிகர் சூரஜ் (கண்ணா ரவி), என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி அருண்மொழி வர்மனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்க வாய்ப்புப் பெறுகிறார். இந்தக் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் அவர், எதிர்பாராத ஒரு திருப்பத்தில், தன் கல்லூரி காதலியின் கணவரான சஞ்சீவை என்கவுண்டர் செய்கிறார்.
ஆனால், சஞ்சீவ் ஒரு வெள்ளைச் சட்டை அணிந்த ‘கட்டப்பஞ்சாயத்து’ ரவுடியாக இருந்தாலும், ஊரில் பலருக்கும் நன்மைகள் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்கிறார். ஒரு ‘நல்லவர்’ சுட்டுக் கொல்லப்பட்டாரா என்ற குழப்பத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகும் அருண், இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதே இந்தத் தொடரின் கிளைமாக்ஸ்.
நடிப்பு: நடிப்பின் அசுர உருமாற்றம்
டெக்னிக்கல் பலம்: தூணாய் தாங்கும் இசை
- இயக்குநர் பவன்: இதுபோன்ற சிக்கலான கதையை யோசித்து, கதாபாத்திரங்களைச் சிலை செதுக்குவது போல சித்தரித்திருக்கும் அவரது பணி ஆச்சரியமளிக்கிறது. கதையின் ஆழமே இத்தொடரின் வெற்றிக்கு முதன்மையான காரணம்.
- இசை (விபின் சாகர்): வேடுவன் தொடரின் கதை மற்றும் நடிகர்களுக்கு இணையாக விபின் சாகரின் இசை ஒரு தூணாகத் தாங்கி நிற்கிறது.
- ஒளிப்பதிவு (சீனிவாசன் தேவராஜ்): தொடர் முழுவதும் அவரது கைவண்ணம் விரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு பிரேமும் போரடிக்காமல், முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களைக் கட்டிப்போட உதவுகிறது.
இறுதித் தீர்ப்பு
‘ரயில் எரிப்பு’, ‘என்கவுண்டர்’ போன்ற பல்வேறு தீவிரமான தீர்ப்புகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை கேள்வி கேட்கும் துணிச்சலான கதையாக ‘வேடுவன்’ உலா வருகிறது.
தரமான படைப்புகளை வழங்கி வரும் ZEE5 ஒரிஜினல் பட்டியலில், அதன் தலைவர் (South) கவுசிக்கின் முயற்சியால் இந்தத் தொடர் ஒரு வைரமாகப் பதிந்திருக்கிறது.
வேடுவன் – மறைக்கப்பட்ட உண்மைகளை வேட்டையாடுகிறான்.


