தூய்மையற்ற ரயில் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களில், 6 இடம் பிடித்த தமிழகம்!

தூய்மையற்ற ரயில் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களில், 6 இடம் பிடித்த தமிழகம்!

குப்பைக் கூளம், நாத்தமெடுக்கும் டாய்லெட் , சரியான பராமரிபின்மை மாதிரியாக காரணங்களால தூய்மையற்ற ரயில் நிலையங்கள் பட்டியலில் இந்த தமிழ்நாடு – நம்ம சென்னையில் அமைந்துள்ள பெருங்களத்தூர், கிண்டி, வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள்கோவில், பழவந்தாங்கல் ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

தூய்மை ரெயில் நிலையம் ‘ஸ்வஜ் ரெயில், ஸ்வச் பாரத் 2019’ அறிக்கை இந்தியா முழுவதும் 720 ரயில் நிலையங்களை ஆய்வு செய்தது. இந்த பிரிவில் ஜெய்ப்பூர் ஒட்டுமொத்த தூய்மை ரயில் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சஸ்வந்த்பூர், புனே, செகந்திராபாத், தாதர் மற்றும் சூரத் போன்ற நிலையங்களுடன் ஒப்பிடும்போது சென்னையின் 3 நிலையங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. இவை அனைத்தும் ஒரே பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தூய்மை தரவரிசை பட்டியலில் சென்னையின் மிகப்பெரிய ரயில் நிலையங்களான எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எக்மோர் (எழும்பூர்) மற்றும் தாம்பரம் ஆகிய மூன்றும் முதல் 50 இடங்களில் கூட இடம் பெறவில்லை. எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையம் 58வது இடத்திலும் (2018இல் 36), எக்மோர் 149 (27), தாம்பரம் 321வது (62) இடத்திலும் உள்ளன. ஒட்டுமொத்த தூய்மை மதிப்பீட்டில் தெற்கு ரயில்வே மண்டலம் கடந்த ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்தது. அது தற்போது 12ஆக குறைந்துள்ளது.

தூய்மையற்ற ரயில் நிலையங்களில் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், நாட்டிலேயே மோசமான ரயில் நிலையமாக பெருங்களத்தூர் ரயில் நிலையம் உள்ளது.

2ஆம் இடத்தில் கிண்டி ரயில் நிலையமும்,

4ஆம் இடத்தில் வேளச்சேரி ரயில் நிலையமும்,

5ம் இடத்தில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையமும்,

6ம் இடத்தில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையமும்,

8ம் இடத்தில் பழவந்தாங்கல் ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது.

தூய்மையற்ற ரயில் நிலையங்களுக்கான பட்டியலில், முதல் 10 இடங்களில், தமிழ்நாட்டில் உள்ள 6 ரயில் நிலையங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

Related Posts

error: Content is protected !!