தமிழர்களுக்கு தனி நாடு கோரவில்லை! – இலங்கை முதலவர் விக்னேஸ்வரன் தகவல்

தமிழர்களுக்கு தனி நாடு கோரவில்லை! – இலங்கை முதலவர் விக்னேஸ்வரன் தகவல்

இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையைப் பிரித்து தமிழர்களுக்கென தனி நாடு வேண்டும் என்று கோரவில்லை. அதற்கு பதிலாக கூட்டாட்சி முறையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களின் லட்சியமாக உள்ளது என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.

இலங்கையின் தெற்கு பகுதியில் இருப்பவர்கள் வடக்குப் பகுதியில் வாழும் தமிழர்களை பயங்கரவாதிகளாகப் பார்க்கிறார்கள். கூட்டாட்சி முறையில் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று கோரினால் நாட்டைத் துண்டாட நினைப்பதாகக் கூறுகிறார்கள். இலங்கைத் தமிழர்களின் தனித்துவத்தை பெரும்பான்மையினரான சிங்களர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகிறார்கள் என்றார் விக்னேஸ்வரன்.

இலங்கை கண்டி நகரில் பிரபலமான புத்த மதத் தலைவரான மல்வத்த மகாநாயக்க திப்பொட்டுவாவே தேரரை சி.வி. விக்னேஸ்வரன் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழர்களின் கோரிக்கைகள், விருப்பம் குறித்து தேரோவைச் சந்தித்து விக்னேஸ்வரன் பேசினார்.

சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் நிதியக் கூட்டணி எதையும் விட்டுக்கொடுப்பதில்லை. எல்லா விஷயங்களிலும் பிடிவாதமாக உள்ளது என்று கூறப்படும் கருத்தை விக்னேஸ்வரன் மறுத்தார். சிறிசேனாவை தமிழர்கள் ஆதரித்த போதிலும் அவரின் நடத்தைமேல் தமிழர்களுக்கு அதிருப்தி தருவதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!