இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

ரே ஒரு ரூபாய்க்கு 3 வேளை உணவு வழங்கி வரும் ஈரோடு தம்பதியினரின் ஈர மனது எனது இதயத்தையும் நனைத்துவிட்ட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்களுக்கு, வெங்கட்ராமன்–ராஜலட்சுமி தம்பதியினர் 1 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கி சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த தம்பதியினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது சோசியல் மீடியா பதிவில், வெங்கட்ராமன்–ராஜலட்சுமி தம்பதியினர் 1 ரூபாய்க்கு உணவு வழங்கும் வீடியோவை வெளியிட்டு, அதில் “மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன்–ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல்! இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!” என்று கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!