13 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவலை

13 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவலை

நாட்டில் 13 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவலை தெரிவித்திருக்கிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. 2 அலைகளை காட்டிலும் 3வது அலை வேகமெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சுப்ரீம் கோர்ட் உள்ள 32 நீதிபதிகளில் கடந்த வாரம் 8 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. அதன் பின்னர் தற்போதைய சூழலில் 13 நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் சிலர் ஓய்வெடுத்து வருகின்றனர். சில நீதிபதிகள் கொரோனா பாதிப்பினால் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவர்களது அறைகளில் இருந்தே வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

தலைமை நீதிபதி கருத்து

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நீதிபதிகளின் உடல்நிலை ஒத்துழைக்காத போதிலும் பலர் தங்களது பணிகளை செய்கின்றனர் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் ஏறத்தாழ 1,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றத்தின் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன. உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் விசாரணை நடந்து வரும் நிலையில், நீதிபதிகள் பற்றாக்குறையால் பல்வேறு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!