June 2, 2023

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ராகுல் காந்தி, உதயநிதி பார்வையிட்டனர் – வீடியோ!

மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா காலம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்பு களுடனும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அதன் படி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் பலத்த வரவேற்பு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் அவனியாபுரம் வந்த ராகுல் காந்தி, ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தார். இதே போட்டியை பார்வையிட தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்த நிலையில் ராகுல்காந்தியும் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து ஒரே மேடையில், சீறிப்பாயும் காளைகளையும் திமிலைப் பிடித்து அடக்கி ஆளும் காளை யரையும் கண்டுகளித்தனர். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் இருந்தனர்.

அதன் பிறகு விழா மேடையில் பேசிய ராகுல் காந்தி, “தமிழ் கலாசாரம் மற்றும் வரலாற்றை நேரில் கண்டு களிப்பது அருமையான அனுபவமாக உள்ளது. காளைகளையும், காளையர் களையும் அனைவரும் பொறுப்பாக கவனித்துக் கொள்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவின்  எதிர்காலத்திற்கு தமிழ் கலாசாரமும், மொழியும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருதியே இங்கு வந்துள்ளேன். தமிழையும், இந்த மண்ணின் கலாசாரத்தையும் ஒதுக்கிவிடலாம் என நினைப்பவர்களுக்கான செய்தியை கொடுக்கவே வந்திருக்கிறேன். தமிழக மக்களிடம் இருந்து மிகுந்த அன்பையும் பாசத்தையும் பெற்றுள்ளேன். அவர்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் மொழியை பாதுகாப்பது எனது கடமை.” என தெரிவித்தார்