பாக். ஃபாரின் மினிஸ்டரி வெப்சைட் முடக்கம்! – இந்திய ஹேக்கர்கள் கைவரிசையா?

பாக். ஃபாரின் மினிஸ்டரி வெப்சைட் முடக்கம்! – இந்திய ஹேக்கர்கள் கைவரிசையா?

சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய  புல்வாமா தாக்குதலுக்கு பின்னர்  பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான விரிசல் மேலும் மோசமடைந்துகொண்டே வருகிறது.  இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி கவனித்துக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமதி பைசல் தெரிவித்தார்.

”உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை. எனினும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முகமது பைசல் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை இந்தியர்கள்தான் முடக்கி இருக்கக்கூடும்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய ஹேக்கர்கள் இதனை செய்திருக்கலாம் என பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிட்டுள்ளன

error: Content is protected !!