இயக்குநர் விக்டர் இமானுவேலின் ‘மரபு’! – எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ஃபர்ஸ்ட் லுக் !
அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரபு’. இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம். எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளார். படத்தை பற்றி இயக்குனர் விக்டர் இம்மானுவேலுவிடம் நம் கட்டிங் கண்ணையா கேட்டபோது “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.
அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ, அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். ஆனால் தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு” என்று அவர் கூறினார்.
இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இந்தப்படத்தை தியேட்டர், ஓ.டி.டி. என்று பல தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் – நடிகைகள் :
நாயகன் : விக்டர்
நாயகி : இலக்கியா
வில்லன் : ஆனந்த பாபு
நாயகியின் அம்மாவாக : ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ
மக்கள் தொடர்பு : பிரியா