பிரதமர் . நரேந்திர மோடி, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம், மனித நேயத்தை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலுக்கான அதன் அணுகுமுறை, மனித குல முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் கூட்டுணiர்வை உறுதி செய்வது ஆகியவை குறித்து ஒரு கட்டுரை மூலம் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
“தில்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் குறித்தும், மனித நேயத்தை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலை வலுப்படுத்துவது குறித்தும், மனித முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் கூட்டு உணர்வை உறுதிப்படுத்தவும் நாம் எவ்வாறு செயல்பட்டோம் என்பது குறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன். அது நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாசகர்கள் பாரவைக்கு இதோ:
‘வசுதைவ குடும்பகம்’ – இந்த இரண்டு சொற்கள் ஆழமான தத்துவத்தைக் கொண்டுள்ளன. இதன் பொருள், ‘உலகம் ஒரே குடும்பம்’ என்பதாகும். அனைவரையும் அரவணைக்கும் கண்ணோட்டத்தைக் கொண்ட இது, எல்லைகளை, மொழிகளை, கோட்பாடுகளைக் கடந்து, ஒரே பிரபஞ்ச குடும்பம் என்ற நிலைக்கு, நம்மை ஊக்கப்படுத்துகிறது. இந்தியாவின் ஜி – 20 தலைமைத்துவ காலத்தில், இது மனிதர்களை மையப்படுத்திய முன்னேற்றம் என்ற அழைப்பாக மாறியுள்ளது. ஒரே பூமி என்ற நிலையில், நம் புவிக் கோளத்தை வளப்படுத்துவதற்கு, நாங்கள் ஒன்றிணைந்து வருகிறோம். மேலும், ஒரே எதிர்காலம் என்ற பகிரப்பட்ட எதிர்காலத்தை நோக்கி, நாங்கள் முன்னேறி செல்கிறோம். இது ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்கும் காலத்தில், மறுக்க முடியாத உண்மை. பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலக ஒழுங்கு, அதற்கு முந்தைய உலகத்தில் இருந்து மிகவும் மாறுபட்டதாக உள்ளது. மற்றவற்றுக்கு இடையே, மூன்று முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
முதலாவதாக, உள்நாட்டு மொத்த உற்பத்தி-யான, ஜி.டி.பி.,-யை மையப்படுத்திய உலகின் கண்ணோட்டம் என்பதிலிருந்து மாறி, மனிதர்களை மையப்படுத்திய கண்ணோட்டமாக இருப்பது அவசியம் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது.
இரண்டாவதாக, உலகளாவிய வினியோகத் தொடரில் உறுதித்தன்மையும், நம்பகத்தன்மையும் முக்கியம் என்பதை, உலகம் அங்கீகரித்துள்ளது.
மூன்றாவதாக, உலகளாவிய அமைப்புகளின் சீர்திருத்தத்தின் மூலம், பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கு, கூட்டான அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த மாற்றங்களில், நம் ஜி20 தலைமைத்துவம் வினையூக்கியாக செயல்படுகிறது.
கடந்த, 2022 டிசம்பரில், இந்தோனேஷியாவிடம் இருந்து தலைமைத்துவத்தை நாம் ஏற்றுக் கொண்ட போது, மனநிலை மாற்றத்தில் வினையூக்கியாக ஜி – 20 இருக்க வேண்டும் என்று நான் எழுதினேன். குறிப்பாக, வளரும் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் விளிம்பு நிலை மக்களை, மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வரும் சூழலில், இது மிகவும் முக்கியமானதாகும்.
மொத்தம், 125 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற வளரும் நாடுகளின் குரல் என்பது, நம் தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாக இருந்தது. வளரும் நாடுகளில் இருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் திரட்டுவதற்கு, மிக முக்கியமான நடவடிக்கையாக இது அமைந்தது.
மேலும் முன் எப்போதும் இல்லாத வகையில், ஆப்ரிக்கா நாடுகளின் பங்கேற்பு இருந்தது என்பதை, நம் தலைமைத்துவம் பார்த்தது மட்டுமின்றி, ஆப்ரிக்க ஒன்றியத்தை, ஜி – 20-ன் நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கும், உந்துதலை ஏற்படுத்தியது. ஒன்றோடொன்று இணைந்த உலகம் என்பதன் பொருள், துறைகள்தோறுமான நம் சவால்கள் இணைந்திருக்கின்றன என்பதாகும். வரும், 2030ம் ஆண்டுக்கான செயல்திட்டத்தின் நடுப்பகுதியாக, இந்த காலகட்டம் உள்ளது. நீடிக்க வல்ல வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தில் தேக்கம் இருப்பதாக, பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆனால், நீடிக்க வல்ல வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவது குறித்த ஜி – 20, இந்த 2023ன் செயல்திட்டம், நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை அமல்படுத்துவதை நோக்கிய ஜி – 20-ன் எதிர்கால திசையைக் காட்டுவதாக இருக்கும். இந்தியாவில் பண்டைக்காலத்தில் இருந்தே இயற்கையுடன் இயைந்து வாழ்வது, ஒரு நடைமுறையாக உள்ளது. நவீன காலத்திலும் கூட, பருவ நிலை செயல் திட்டத்திற்கு, நம் பங்களிப்பை நாம் செய்து வருகிறோம். வளரும் நாடுகளில், பல வளர்ச்சிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவை பருவ நிலை செயல்திட்டத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். பருவ நிலை செயல்திட்டத்திற்கான விருப்பங்களை நிறைவேற்ற, பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் இருக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எதை செய்யக்கூடாது என்பதில், கடுமையாக இருப்பதைவிட, எதை செய்ய வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான அணுகுமுறையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்பதை நாங்கள் நம்புகிறோம். நீடிக்கவல்ல உறுதியான நீலப் பொருளாதாரத்திற்கு ஏற்ப, நம் கடல்களின் துாய்மைத் தன்மையை பராமரிப்பதில், சென்னை உயர்நிலைக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன.
பசுமை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையத்துடன், நம் தலைமைத்துவத்தில் இருந்து, துாய்மையான பசுமை ஹைட்ரஜனுக்கான உலகளாவிய சூழல் அமைப்பு உருவாகும். கடந்த, 2015-ல், நாம் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியைத் துவங்கினோம். தற்போது உலகளாவிய உயிரி எரிபொருட்கள் கூட்டணி மூலம், சுழற்சி பொருளாதாரப் பயன்களுடன், உலக எரிசக்தி மாற்றத்திற்கு உலக அளவில் நாம் ஆதரவாக இருப்போம். பருவ நிலை செயல்திட்டத்தை ஜனநாயகப்படுத்துவது, இந்த இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். தனிநபர்கள் தங்களின் நீண்ட கால ஆரோக்கியத்தின் அடிப்படையில், அன்றாட முடிவுகளை மேற்கொள்வது போல, இந்தப் புவிக் கோளின் ஆரோக்கிய அடிப்படையில், அவர்கள் வாழ்க்கை முறை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
உடல் நலத்திற்கு உலகளாவிய மக்கள் திரள் இயக்கமாக யோகா மாறியிருப்பது போல், நீடிக்கவல்ல சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையுடனும், உலகத்தை நாம் உத்வேகப்படுத்தி வருகிறோம். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, உணவு மற்றும் சத்துணவு பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானதாக இருக்கும். இதற்கு சிறுதானியங்கள் அல்லது ஸ்ரீ அன்னா உதவியாக இருப்பதோடு பருவநிலைக்கு உகந்த வேளாண்மையையும் ஊக்கப்படுத்தும்.
சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டில் சிறுதானியங்களை நாம் உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்த இசை வடிவில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த உயர் நிலைக் கோட்பாடுகள் உதவிகரமாக உள்ளன. தொழில்நுட்பம் மாற்றத்திற்கானதாக மட்டுமின்றி, அனைவரையும் உட்படுத்துவதற்கான தேவையாகவும் இருக்கிறது. கடந்த காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சமமான பயனை அளிக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலையை அதிகப்படுத்துவதற்கு மாறாக, தொழில்நுட்பம், சமத்துவமின்மையை எவ்வாறு குறைக்கும் என்பதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, உலகம் முழுதும் கோடிக்கணக்கானவர்கள் வங்கிக் கணக்கு பெற்றிடாத நிலையில் அல்லது டிஜிட்டல் அடையாளங்கள் இல்லாத நிலையில், இந்தியாவில் டிஜிட்டலுக்கான பொதுக் கட்டமைப்பு மூலம் பொருளாதார ரீதியாக அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜி – 20 மூலம் அனைவரையும் உட்படுத்திய வளர்ச்சியின் அதிகாரத்தை அளிப்பதற்கு, பொதுக் கட்டமைப்பு முறையை வளரும் நாடுகளுக்கு நாம் வழங்கி, உதவலாம். இந்தியா அதிவிரைவாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் என்பது, தற்செயலானது அல்ல. நமது எளிய, அதிகப்படியான, நீடிக்கவல்ல தீர்வுகள், சாமானிய மக்களுக்கு அதிகாரத்தை அளித்துள்ளன.
நம் வளர்ச்சிக் கதைக்கு, நலிந்த பிரிவு மக்கள், தலைமை தாங்குகின்றனர். விண்வெளியில் இருந்து விளையாட்டுகள் வரை, பொருளாதாரத்தில் இருந்து தொழில் முனைவு வரை, இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கின்றனர். பெண்களின் மேம்பாடு என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்பதற்கு மாறியிருக்கின்றனர்.
பாலின ரீதியிலான டிஜிட்டல் பாகுபாடுகளைக் குறைப்பதற்கும், தலைமைத்துவத்தில் முடிவுகள் எடுப்பதில் பெண்களுக்கான பங்கை அதிகரிப்பதற்கும், நம் ஜி – 20 தலைமைத்துவம் பாடுபட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஜி – 20 தலைமைத்துவம் என்பது, வெறுமனே உயர்நிலை ராஜீய பதவி அல்ல. ஐனநாயகத்தின் தாய் என்ற நிலையில், பன்முகத்தின் முன்மாதிரி என்ற நிலையில், இந்த அனுபவத்தின் கதவுகளை உலகத்திற்கு நாம் திறந்து வைத்துள்ளோம். இன்று அதிகப்படியான பொருட்களின் தரம் என்பது இந்தியாவோடு இணைந்ததாக இருக்கிறது. ஜி – 20 தலைமைத்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இது மக்கள் பங்கேற்புள்ள இயக்கமாக மாறியிருக்கிறது. நம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், 60 நகரங்களில், 200-க்கும் அதிகமான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
நம் தலைமைப் பொறுப்பு நிறைவடையும் காலத்திற்குள் நடத்தப்பட்ட கூட்டங்களில், 125 நாடுகளைச் சேர்ந்த, 1 லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். எந்தவொரு தலைமைத்துவமும் இவ்வளவு பெரிய, பன்முகப்பட்ட புவியியல் சூழலில் கூட்டங்களை நடத்தியதில்லை. இந்தியாவின் மக்கள் தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் வளர்ச்சி குறித்து பலரும் பேசுவதை கேட்கமுடிகிறது. இவற்றை முதன் முறையாக அவர்கள் அனுபவம் கொள்வது, முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. நம் ஜி – 20 பிரதிநிதிகள் இதற்கு சான்று என, நான் உறுதியாக நம்புகிறேன்.
நமது ஜி – 20 தலைமைத்துவம் பாகுபாடுகளை இணைக்கவும், தடைகளை உடைக்கவும் பாடுபட்டுள்ளது. முரண்பாடுகளை நீக்கி ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், ஒத்துழைப்புக்கான விதைகளை நாம் விதைத்துள்ளோம். அனைவரின் குரல் கேட்பதையும் அனைத்து நாடுகளும் பங்களிப்பு செய்வதையும் உறுதிப்படுத்த, ஜி – 20 தலைமைத்துவம் என்ற முறையில் உலகளாவிய பங்கேற்பை அதிகப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். செயல்கள் மற்றும் விளைவுகள் வழியாக நம் உறுதிமொழியை நாம் இணைத்திருப்பதாக நான் நம்புகிறேன்.
ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…
பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காமல்,தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய…
மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை…
SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து…
அண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத்…
ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று…
This website uses cookies.