கிரிக்கெட் ; இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்தது!

கிரிக்கெட் ; இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்தது!

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. திர்மன்னே(67), மேத்யூஸ்(55) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் புவனேஷ்குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். தோனி 100-வது ஸ்டம்பிங் செய்தார்.

இதனையடுத்து 239 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 29 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ரகானே(5), ரோகித் சர்மா(16) ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர், கேப்டன் விராட் கோலி, மணிஷ் பாண்டே இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மணிஷ் நிதானமாக ரன்களை சேர்க்க கோலி அடித்து விளையாடி 53 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

நிதானமாக விளையாடிய மணிஷ் பாண்டே 36(53) ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், கேதர் ஜாதவ் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 107 பந்துகளில் சதம் அடித்தார். ஜாதவ் பவுண்டரிகளாக விளாசி 52 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜாதவ் 63(73) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக, 46.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. கேப்டன் கோலி 110(116) ரன்களும், தோனி 1 ரன்னும் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். விராட் கோலி இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்தார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் இழந்த இலங்கை அணிக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது.

Related Posts

error: Content is protected !!