தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு!

தமிழகத்தின் கடைகோடியில் உருவாகி இன்றளவும் சர்ச்சை செய்திகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கும்  ஸ்டெர்லைட் ஆலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் 13 ஊழியர்கள் இறந்ததாக கூறும் குற்றசாட்டு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

போராட்ட, எதிர்ப்பலை, துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி ஆன நிலையில்  தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் அதிகாரம் அமைப்பு தரப்பில் வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் ஆஜராகி வாதிட்டார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மீதும், பேனர் வைத்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக மக்கள் அதிகாரம் அமைப்பு வாதிட்டது. பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், விவிஐபிகளை மலர் தூவி வரவேற்பதற்கு பள்ளி குழந்தைகள் ஈடுபடுத்தப் படுவதாக குற்றம்சாட்டினர்.

மேலும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பேனர் வைத்ததற்கு உடனடியாக வழக்கு பதிவு செய்த காவல் துறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக ஏன் வழக்கு பதிவு செய்வதில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புதிதாக யாராவது சென்னைக்கு வந்தால் அவர் எந்த சாலையில் பயணிக்கிறார் என்பது தெரியாத அளவிற்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக நீதிபதிகள் கூறினர்.

ஸ்டெர்லைட் ஆலையில், 2004ஆம் ஆண்டு, 13 ஊழியர்கள் விஷவாயு தாக்கி இறந்திருப்பதாக குற்றம்சாட்டும் மக்கள் அதிகாரம் அமைப்பு, அதுகுறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க அந்த அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!