பிரிட்டனில் எரிபொருள் தட்டுபாட்டால் கலவரம்!

பிரிட்டனில் எரிபொருள் தட்டுபாட்டால் கலவரம்!

பிரிட்டனில் எரிபொருளுக்‍காக வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருக்‍கும் அவலம் நீடிப்பதால், பொதுமக்‍கள் பெரிதும் சிரமத்துக்‍கு ஆளாகியுள்ளனர்.

பிரிட்டனில் சரக்‍குப் போக்‍குவரத்துக்‍கான ஓட்டுனர்கள் பற்றாக்‍குறை ஏற்பட்டதால் எரிபொருள் வினியோகம் கடந்த சில நாட்களாக கடுமையாகப் பாதிக்‍கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்லாயிரக்‍கணக்‍கான பெட்ரோல் பம்ப்புகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்‍கும் நிலையில் பல இடங்களில் எரி​பொருளுக்‍காக பொதுமக்‍கள் ஒருவரை​ ஒருவர் தாக்‍கிக்‍கொள்ளும் சம்பவங்களும் நடந்தன.

இதற்கிடையே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்‍கள் அளவுக்‍கு அதிகமாக பெட்ரோல், டீசல், கியாஸ் போன்றவற்றை நிரப்புவது, பிரச்சினையை மேலும் அதிகரிக்‍கும் என அந்நாட்டு அரசு கருத்து தெரிவித்தது.
ஆனால், இது​வரை எரிபொருள் பற்றாக்‍குறை சரிசெய்யப்படாததால், எங்கு பார்த்தாலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்‍கும் அவலம் தொடர்கிறது. இதனால் பொதுமக்‍கள் வெகுவாகப் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!