சந்திராயன்–3 -நிலவு, பூமியின் வியக்கதக்க அம்சங்களை வெளிக்கொண்டு வரும்!

சந்திராயன்–3 -நிலவு, பூமியின் வியக்கதக்க அம்சங்களை வெளிக்கொண்டு வரும்!

த்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங், அளித்துள்ள பேட்டியில், “சந்திரயான்-1 திட்டம் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை உலகிற்கு வெளிக்கொண்டு வந்து பல்வேறு புதிய அம்சங்களுக்கு அடிகோலியது. தற்போது சந்திரன் -3 திட்டத்தின் மீது ஒட்டுமொத்த உலகமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், புதிய அம்சங்கள், நிலவு மற்றும் புவியின் வியக்கத்தக்க அம்சங்களை சந்திராயன் 3 வெளிக்கொண்டு வர உள்ளது

.

சந்திரயான் -3 விண்கலத்தின் சமிக்ஞைகள் நிலவில் ஒரு படி மேலும் நெருங்கும். நிலவைப் பற்றி ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விட இந்தியா பின் தங்கவில்லை என்பதை நிரூபித்துக் காட்டும். சந்திரயான் -3 இல் உள்ள தனித்துவமான அம்சங்கள் நிலவில் இருந்து நிலவை மட்டும் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், நிலவிலிருந்து பூமியையும் கண்காணித்து விண்வெளி துறையில் சாதித்துள்ள பெருமைமிக்க பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்.

இந்திய விண்வெளி தொழில்நுட்பம் ராக்கெட் ஏவுதலோடு மட்டுமில்லாமல், பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தையும் அளித்து வருகிறது. இந்தியா கடந்த ஆறு தசாப்தங்களாக விண்வெளி திட்டங்களில் தனது வளமிக்க விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது.

மேலும், இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கையில், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, விவசாயம், கல்வி, மருத்துவம், ஊரக வளர்ச்சி, பேரிடர் எச்சரிக்கை மற்றும் தணிப்பு, காலநிலை மாற்றம், திசையறிதல், பாதுகாப்பு மற்றும் ஆளுகை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி மற்றும் விண்வெளி பொருளாதாரம் ஆகியவை எதிர்காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கான முக்கிய தூணாக இருக்கும். 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இந்தியா மூலம் ஏவப்பட்டுள்ளன. மேலும், செயற்கைக் கோள்களை ஏவியதன் மூலம் 174 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!