8 ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கு ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் ஆபீஸ் அசிஸ்டெண்ட், கார்டனர், வாட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை ஐகோர்ட் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கூடிய இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்தவர்கள் கூட பலரும் விண்ணப்பிப்பது வழக்கம். அரசு வேலை என்பதால் பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம் ஆகியவை கிடைக்கும் என்பதால் கடும் போட்டி நிலவும்.
பணியிடங்கள் விவரம்:
1. சோப்தார் – 12
2. அலுவலக உதவியாளர் – 137
3. குடியிருப்பு உதவியாளர் – 87
4. ரூம் பாய் – 04
5. துப்புரவு பணியாளர் – 73
6. தோட்டக்காரர் – 24
7. வாட்டர்மேன் – 02
8. துப்புரவு பணியாளர் – 49
9. வாட்ச்மேன் – 04 என மொத்தம் 392 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
* சோப்தார் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.
* அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சமையல், ஹவுஸ் கீப்பிங்கில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
* குடியிருப்பு உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி போதும். ஓராண்டு craft course முடித்து இருக்க வேண்டும்.
ஹவுஸ் கீப்பிங், சமையல், பேக்கரி ஆகிய பிரிவுகளில் முடித்தவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இருந்தாலும் முன்னுரிமை அளிக்கப்படும்.
* இதர பணியிடங்கள் அனைத்திற்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்.
வயது வரம்பு:
01.07.2025 தேதிப்படி 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். அதாவது, 02.07.1988- க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவினர் என்றால் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?:
* சோப்தார் – ரூ.15,700 – 58,100 /-
* அலுவலக உதவியாளர் – ரூ.15,700 – 58,100 /-
* குடியிருப்பு உதவியாளர் – ரூ.15,700 – 58,100 /-
* அறை பணியாளர் – ரூ.15,700 – 58,100 /-
* துப்புரவு பணியாளர் -ரூ.15,700 – 58,100 /-
* தோட்டக்காரர் – ரூ.15,700 – 58,100 /-
* வாட்டர்மேன் – ரூ.15,700 – 58,100 /-
* சுகாதார பணியாளர் – ரூ.15,700 – 58,100 /-
* வாட்ச்மேன் – ரூ.15,700 – 58,100 /-
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. (https://www.mhc.tn.gov.in/) என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அவகாசம்:
06.04.2025 முதல் 05.05.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க இங்கே கிளிக் செய்யவும். https://www.mhc.tn.gov.in/recruitment/login