எனது கேப்டன் டிவியைக் கூட எனக்காக பயன்படுத்திக் கொள்வதில்லை! – காஞ்சியில் விஜய்காந்த் பேச்சு

எனது கேப்டன் டிவியைக் கூட எனக்காக பயன்படுத்திக் கொள்வதில்லை! – காஞ்சியில்  விஜய்காந்த்  பேச்சு

தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்ற பெயரில் தேமுதிகவின் மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது.மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு அழைப்பிதழுடன் வந்திருந்தனர். மாநாட்டு மேடைக்கு அக்கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் இரவு 8.25 மணிக்கு வந்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் ஆர்ப்பரித்து, வாழ்த்து கோஷம் எழுப்பினர். முரசு அடித்து மாநாட்டை தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.
vijaykantha feb 21
அதனை தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கியது இதில் விஜயகாந்த் பேசும்போது “தேமுதிக மாநாட்டால் காஞ்சிபுரம் குலுங்கிவிட்டது. இந்த வெற்றிக்கு காரணமான ராணுவம் போன்ற தொண்டர் களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களைப் பற்றி எனது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண் முக பாண்டியன் ஆகியோரிடம் அடிக்கடி பெருமையாகச் சொல்வதுண்டு. எனது குடும்பம் இவ்வளவுதான். எனக்கு பழையச் சோறும் வெங்காயமும் போதும். எனக்கு மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை என்று சொன்ன ஜெயலலிதா இப்போது கூட்டணிக்காக முயற்சித்து வரு கிறார்.234 தொகுதிகளுக்கும் இப்போது அவர்களால் வேட்பாளர்களை அறிவிக்க முடியுமா என நான் கேட்கி றேன். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து ‘அடுத்த தேர்தலில் தேமுதிக வுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும்’ என்று அதிமுக அமைச்சர்கள் சட்டப்பேரவை யில் பேசுகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற எல்லா இடைத் தேர்தல்களிலும் அதிமுக தோற்றது. பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவே தோற்றுப் போனார். எனவே அதிமுக தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல.

எனக்கும், என் மனைவிக்கும் ஒரு வேளை சாப்பாடு போட மாட்டீர்களா? இது தான் வேண்டும். 234 தொகுதி களிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லையென்று ஜெயலலிதா சொன்னார். இப்போது இந்த கூட்டத்தை பார்த்து உங்களுக்கு கண்கள் கட்டி விட்டதா? ஆட்சியில் இருப்பதால் தான் இடைத்தேர்தலில் ஜெயிக்கிறீர்கள். பர்கூர் தொகுதியில் ஏன் தோற்றீர்கள்.

சட்டசபைக்கு நான் போனால் கேள்வி வேற மாதிரி இருக்கும். 2004-ல் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பூஜ்ஜியம் பெற்றீர்களே? ஜீரோ பன்னீர்செல்வம் இருக்கிற வரை இந்த நாடும், உங்கள் கட்சியும் உருப்படாது. சாலைகள் எப்படி இருக்கு? குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 20 லிட்டர் தண்ணீர் கொடுப்பேன் என் றார்கள். ஆனால் ஆட்சியின் கடைசியில் செய்கிறீர்கள். ஊழல் செய்த கை நிற்காது. அதற்கு எடுத்து காட்டு தான் இந்த ஆட்சி.. 5 ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதிமுக ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல். சாலை கள் படுமோசமாக உள்ளன. ஆட்சி முடியும் தருவாயில் அறிவிப்புகளை வெளியிடுவதால் எந்தப் பலனும் இல்லை. ஊழல் செய்தவர்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. அதிமுக ஆட்சியின் அவலங்களை அக் கட்சியின் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

எனக்கு திரைப்படங்களில் மட்டுமே நடிக்கத் தெரியும். மக்களிடம் நடிக்கத் தெரியாது.விஜயகாந்த் என்ன முடிவெ டுப்பார்? ஏன் மவுனமாக இருக்கிறார்? என்றெலாம் பத்திரிகைகள் எழுதுகின்றன. வரும் தேர்தலில் என்ன செய்வது என்பதை நான் யோசித்து வருகிறேன். அதனை இப்போதே சொல்ல வேண்டியதில்லை. சில ஊடகங்கள் அதிமுக வுக்கும், சில ஊடகங்கள் திமுகவுக்கும் சாதகமாக செயல்படுகின்றன. அதிமுகவின் தவறுகளை மறைக்கிறார்கள். தேமுதிக வுக்கு எதிராக செயல்படுகிறார்கள். நான் எனது கேப்டன் டிவியைக் கூட எனக்காக பயன்படுத்திக் கொள்வதில்லை.

என்னை நம்பிய தொண்டர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளித்து முடிவெடுப்பேன். தொண்டர்கள் வாழ்ந்தால் விஜயகாந்த் வாழ்வார். விஜயகாந்த் வாழ்ந்தால் தொண்டர்கள் வாழ்வார்கள். இனியும் தொண்டர்களை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன். தொண்டர்களின் அன்பே எனக்கு போதுமானது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

கிங்கா? கிங் மேக்கரா?

தனது உரையின்போது கூட்டணி வேண்டுமா அல்லது வேண்டாமா என விஜயகாந்த் தொண்டர்களைப் பார்த்து கேட்டார். வேண்டாம் என தொண்டர்கள் குரல் எழுப்பினர்.நான் கிங்காக இருக்க வேண்டுமா அல்லது கிங் மேக்கராக இருக்க வேண்டுமா என்ற மற்றொரு கேள்வியை தொண்டர்களிடத்தில் விஜயகாந்த் கேட்டார். அதற்கு கிங் ஆகத்தான் இருக்க வேண் டும் என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து ‘பத்திரிகையாளர்களே எங்கள் தொண்டர்கள் கூறுவதைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என கூறிய விஜயகாந்த் உரையை நிறைவு செய்தார்.

error: Content is protected !!